படிக்கட்டில் பயணம் செய்வதில் மோதல்…ரயிலில் இருந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த பெரும் சோகம்.!

ரயில் படிக்கட்டில் பயணம் செய்வதில் மோதல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் – கோவை இடையயே சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த இருவர் உயிரிழந்தனர். படிக்கட்டில் பயணம் செய்வதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த மோதலில் இருவரும் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.

ரயிலின் படியில் இருந்து ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றோருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.