#Speaking4India: தெற்கில் இருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், ‘Speaking4India’ என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆடியோ பரப்புரையை தொடங்கியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். (PODCAST) ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் ஸ்டாலின் உரையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் பேசுகையில், இந்தியாவை பாஜக அரசு எப்படி எல்லாம் உருக்குலைத்தார்கள் என பேச வேண்டி உள்ளது, எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா குறித்து பேச உள்ளேன். தெற்கில் இருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள் என அறிவித்துள்ளார்.

 

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை மும்பை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபின், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.