கருமேகம் சூழ்ந்த சென்னை…மெரினாவில் திடீர் சூறாவளி காற்று.!!

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளது. 

சென்னையில் உள்ள பல இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக மெரினா, பல்லாவரம் உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் பலரும் அவதியில் உள்ளனர்.

சென்னையை போலவே, திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் தற்போது பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. அடுத்த சில மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்று வீசி வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.