அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

3 மாவட்டங்களில் மழை:

இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை மழை: 

உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிக்கின்ற்னர்.

Leave a Comment