தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம்.!

தமிழகத்தின் 15 மாவட்டங்களுக்கு அடுத்த சில மணி நேரங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை வரக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பு.

வளிமண்டலத்தில் நிலவியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Comment