மக்களே ஜில் ஜில்…நாளை முதல் கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி.!

கோவை குற்றாலத்தில் நாளை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கோயம்பத்தூர் மாவட்டம் சிறுவாணி அருகே உள்ள கோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்த அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், ஜூலை முதல் வாரத்தில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து சற்று குறைந்திருப்பதால் நாளை (18.07.2023) முதல் மக்கள் அனுமதக்கப்பட இருக்கிறார்கள்.