கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதில் வலதுகை அகற்றப்பட்ட பெற்றுவந்த குழந்தை உயிரிழப்பு.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது முகமதுமகீர் என்ற குழந்தையின் வலது கை அழுகிய நிலையில் அகற்றப்பட்டது. குழந்தையின் வலது கை அகற்றட்டப்பட்டதாகவும், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டது. 

இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.