அ.தி.மு.க. சார்பில் ஜூலை 20ம் தேதி ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு.!

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஜூலை 20ம் தேதி ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜூலை 20ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இதில், கட்சித் தொண்டர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.