கள ஆய்வில் முதலமைச்சர், புதிய திட்டம்.! அரசு அறிவிப்பு.!

தமிழக அரசு, கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் படி வேலூர் மண்டலங்களில் உள்ள மாவட்டங்களில், பிப்-1, 2 ஆகிய நாட்களில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வரும் தகவல்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment