மாணவர்களே….! கல்லூரிகளில் சேர்வதற்கு மேலும் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம்..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், இதுவரை அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக 2.37லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 8 முதல் தமிழகத்தில் 633 தனியார் கல்லூரிகள், 163 அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.