தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்.. 5 வாரங்களில் 2700 பேர் பதிவு.!

இறந்த பின்போ அல்லது மூளைச்சாவு அடைந்த பிறகோ ஒருவரது உடலில் செயல்பாட்டில் இருக்கும் உறுப்புகளை உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவருக்கு தானமாக வழங்கும் உடல் உறுப்பு தான முறை தமிழகத்தில் பெருகி வருகிறது.

இதனை வரவேற்கும் வகையில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்தோரின் இறுதி சடங்கானது அரசு மரியாதையுடன் நடைபெறும் என் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது -அமைச்சர் சேகர்பாபு

உடல் உறுப்பு தானம் செய்தவரின் இறுதி சடங்கில் அரசு சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்வார்கள் என்றும் முதல்வர் அரசாணையில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்தில் சமீப காலமாக சிலரது இறுதி சடங்கானது அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

இதனை அடுத்து , தற்போது தமிழக அரசு ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் கடந்த 5 வாரத்தில் மட்டும் 2,700 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர் என தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஜஸ்ட் மிஸ்! பாம் பிளாஸ்ட்லிருந்து தப்பித்த விஜய்..பயந்த நடுங்கிய சம்பவம்!

சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…

21 seconds ago

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

6 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

26 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

35 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

44 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago