தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுக்க மிதமான மழை பெய்தது.
வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலும் கூடிய மழை பெய்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கேகே நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் என பல்வேறு பகுதிகளின் மிதமான மழை பெய்தது.
மேலும், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்று வீசியதால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
அதேபோல் திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. மேலும், இன்னும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் வரும் ஜூலை 18ஆம் தேதி வரையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…