கொளுத்திய வெயிலில் திடீர் கனமழை…மகிழ்ச்சியில் சென்னை மக்கள்.!!

ChennaiRains

கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை கொட்டி வருகிறது. சென்னை கூடுவாஞ்சேரி, பாண்டூர், நெல்லிகுப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.  கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வானிலை நிலவரம் 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்