ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், (மே 15) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. குமாரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக (மே 15) தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
அதைப்போல, வரும் மே 18-ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், மே 19-ஆம் தேதி தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025