வெளியே வராதீங்க….! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்….

heat and rain

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 4ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

வெப்பநிலை:

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:

எனவே, வெயில் நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெளியே வர வேண்டாம். வெளியே சென்றாலும் அடிக்கடி தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.

மழை:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.

சென்னை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
good bad ugly VS idly kadai
PMModi -Animals
IMD - Summer
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head