மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

Default Image

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இரவு முழுவதும் பரவலாக லேசான மழை பெய்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு முதல் சென்னையின் பாரிமுனை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இதேபோல் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளன. இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்