Categories: வானிலை

புயல் ஆந்திரகடற்கரையோரம் நகர்ந்து செல்லும்

Published by
Dinasuvadu desk

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியவை,

‘நேற்று(டிசம்பர் 3) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (டிசம்பர் 4) அதே பகுதியில் நீடிக்கிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். டிசம்பர் 6-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும்.

இதனால் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தமட்டில் அதிகபட்சமாக, தேனி மாவட்டம் அரண்மனைபுதூரில் 6 செ.மீ. மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 4 செ.மீ. மழையும், பெரியகுளத்தில் 3 செ.மீ. மழையும், சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் 2 செ.மீ. மழையும், ஆனைக்காரன்சத்திரம், திருவாடணை, சீர்காழி, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி யுள்ளது.’ இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் சில தனியார் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, தற்போது வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி, அந்த புயல் வலுவிழந்து ஆந்திர கடற்கரை நோக்கி சென்று விடும். இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்திற்கு புயல் ஆபத்து இல்லை எனவும் கூறியுள்ளனர். ஆனால், இந்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதியில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

1 hour ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago