Stray Dogs Attack [Image Source : Twitter /@Ramith18]
கேரளாவில் 9 வயது சிறுமியை தெருநாய்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக கேரளா மாநிலம் கண்ணூரில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் ஜான்வி என்ற ஒன்பது வயது சிறுமி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது மூன்று தெருநாய் சிறுமியை தாக்கியுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில் நாய்கள் சிறுமியை தரையில் தள்ளி கடிப்பது தெரிகிறது. உதவிக்காக சிறுமி அலறியதும், அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்தபோது நாய்கள் சிறுமியை விட்டு ஓடிவிட்டன.
நாய்கள் கடித்ததால் தலை, வயிறு, தொடைகள் மற்றும் கைகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்ட நிலையில், ஜான்வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சத்தினம்குளத்தில் 10ம் வகுப்பு படிக்கும் ஆதில் என்ற மாணவனை தெருநாய் கடித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…