#VIRAL: பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி திரும்பிவர மறுத்ததால் டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய கணவர்.!

மாமனார் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால்  75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறி தகராறு செய்த நபர்.. வைரலாகும் வீடியோ.!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள கனியாரி கிராமத்தில், மனைவி பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பி வர மறுத்ததால், இளைஞர் ஒருவர் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய தர்ணாவில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கீழே வருமாறு வற்புறுத்தியும், அவர் இறங்கவில்லை. பின்னர் மனைவியை திருப்பி அனுப்புவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து, அவர் சமாதானம் அடைந்து டவரில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

அவர் டவரிலிருந்து இறங்கிய பிறகு, பிலாய் போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment