விகாஸ் துபே என்கவுண்டர்: சட்டம் தனது கடமையை செய்துள்ளது – நரோட்டம் மிஸ்ரா.!

விகாஸ் துபே கொலை செய்ததை நியாயப்படுத்துவது நீதித்துறைக்கு புறம்பானது. அதே வேளையில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது என மத்தியப்பிரதேச (எம்.பி.) உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார்.

கான்பூரில் 8 போலீசாரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த விகாஸ் துபேவை  மத்திய பிரதேச போலீசார் உஜ்ஜைனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு  அழைத்து வரப்பட்டபோது அவர்கள் வந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்து நடந்தது.

இந்த விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், போலீசாரும் சுட்டனர், இந்த சம்பவத்தில் காயமடைந்த ரவுடி விகாஸ் துபேவை  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்தியப்பிரதேச (எம்.பி.) உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த சம்பவம் குறித்து நேற்று கருத்து கூறுகையில், ரவுடி  விகாஸ் துபே கொலை செய்ததை நியாயப்படுத்துவது நீதித்துறைக்கு புறம்பானது. அதே வேளையில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது என கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி நேற்று (அதாவது நேற்று முன்தினம் ) அவரைப் போன்ற ஒரு பயங்கரமான குற்றவாளியை எவ்வாறு உயிருடன் பிடிக்க முடியும் என்று கேள்விகளை எழுப்பியது. ஒரு நாள் கழித்து, இன்று (அதாவது நேற்று) அதே கட்சி கேட்கிறது, அவர் ஏன் கொல்லப்பட்டார், ஏனெனில் அவரது மரணத்துடன் பல ரகசியங்கள் புதைக்கப்பட்டன. இது காங்கிரஸின் மனநிலையையும், அதன் சிந்தனை செயல்முறையையும் காட்டுகிறது என தெரிவித்தார்.

author avatar
murugan