சுந்தர்.சி இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படம் நாளை அதிகாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க செல்பவர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அது என்னவென்றால் காசி, ரோகினி சில்வர் ஸ்கிரீன், ஜி.கே சினிமாஸ் உள்ளிட்ட தியேட்டர்களில் சிம்பு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தை பார்க்க வருபவர்களுக்கு சிம்புவை பார்ப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.