வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டதால் ஒரு வாரத்திற்கு ட்ரம்பின் Donald j.Trump என்ற சேனலுக்கு யூடியூப் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதற்கு முன் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனம் ட்ரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்ய கடந்த 7-ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சமபவத்திற்கு வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வீடியோவை அதிபர் டொனால்டு வெளியிட்டதால் டிரம்ப் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டது.
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…