வரலாற்றை எழுதும் உங்கள் கைகள் ரத்தக் கறை படிந்தது – அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் துருக்கி அதிபர்!

Published by
Rebekal

ரத்தக்கரை படிந்த உங்கள் கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களை துருக்கி அதிபர் எர்டோகன் அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கு இடையே பல ஆண்டுகளாக நடைபெறக்கூடிய மோதல் தற்பொழுது ஒரு வாரமாக மிக அதிகமாக ஏற்பட்டு வருகிறது. காசா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது கடந்த வாரம் முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களது தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே வான்வழி தாக்குதல் அதிக அளவில் நடந்து வரும் நிலையில் காசா முனையை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் உயிரிழந்த நிலையில் இஸ்ரேலை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசா மீதான விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது என்பதால் இஸ்ரேலுக்கு 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் கையெழுத்து போட்டுள்ளார். இது குறித்து அமெரிக்காவில் உள்ள சில காங்கிரஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்தக்கரை படிந்த கைகளால் வரலாற்றை எழுதுகிறார் எனவும் தன்னை இப்படி பேச வைப்பது நீங்கள் தான் எனவும் ஜோ பைடனை விமர்சித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் இனியும் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது என தெரிவித்த அவர், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பான ஜோ பைடன் கையெழுத்தை தாங்கள் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

37 minutes ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

1 hour ago

நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!

காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே  இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…

1 hour ago

தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…

2 hours ago

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…

2 hours ago

தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

3 hours ago