இளம் பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் – 44 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு!

Published by
Rebekal

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 20 வயதுடைய ஒரு வாலிபர் நகர் வீதியில் கத்தியுடன் வலம் வந்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து திடீரென அந்த வாலிபர் அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் 24 வயது இளம்பெண் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் 41 வயதுடைய பெண்ணும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தாக்குதல் நடத்திய அந்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்துள்ளது. கொலை செய்தது உண்மை என தற்பொழுது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் இது குறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் மெர்ட் நெய் எனும் அந்த 20 வயது வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வாலிபர் 33 ஆண்டுகளுக்கு பரோலில் கூட வெளியில் வர முடியாது எனவும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது இந்த 20 வயது வாலிபர் தன்னுடைய 53 வயது வரை சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

59 minutes ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

1 hour ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

2 hours ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

3 hours ago

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…

3 hours ago

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

4 hours ago