இளம் பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் – 44 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு!

Published by
Rebekal

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 20 வயதுடைய ஒரு வாலிபர் நகர் வீதியில் கத்தியுடன் வலம் வந்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து திடீரென அந்த வாலிபர் அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் 24 வயது இளம்பெண் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் 41 வயதுடைய பெண்ணும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தாக்குதல் நடத்திய அந்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்துள்ளது. கொலை செய்தது உண்மை என தற்பொழுது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் இது குறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் மெர்ட் நெய் எனும் அந்த 20 வயது வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வாலிபர் 33 ஆண்டுகளுக்கு பரோலில் கூட வெளியில் வர முடியாது எனவும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது இந்த 20 வயது வாலிபர் தன்னுடைய 53 வயது வரை சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago