தனது காதலை வித்தியாசமான முறையில் கடலுக்கடியில் வெளிப்படுத்திய இளைஞன் ! சம்மதத்தை தெரிவிக்கும் முன்பே உயிர் பிறந்த சோகம் !

Default Image

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் வெபர் மற்றும் ஆண்டோன் என்ற இருவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்கள்.ஆனால் ஒர்க்லழுது காதலை இருவரும் வெளிபடுத்தவில்லை.

இந்நிலையில் இவர் இருவரும் டான்சானியாவில் உள்ள பெம்பா தீவிற்கு சென்றுள்ளார்கள்.அங்கு  அவர்கள் இருவரும் கடலுக்கடியில் 30 ஆடி ஆழத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள.அப்போது ஸ்டீவ் அவரது காதலை வித்தியாசமான முறையில் வெளி படுத்த அங்குள்ள ஆழமான கடல் நீரில் இறங்கி காதலை வெளி படுத்த முயன்றுள்ளார்.

அப்போது அதை கண்ணாடி வழியாக பார்த்த அவரது காதலி ஆண்டொனிடம் அவர் நான் உன்னை எந்த அழிவிற்கு காதலிக்கிறேன் என்பதை சொல்லும் அளவிற்கு என்னால் இந்த மூச்சை அடக்கி வைத்திருக்க முடியாது.உன் மேல் இருக்கும் காதல் ஒவ்வொரு  நாளும் அதிகரித்து கொண்டே போகிறது என்று கூறியுள்ளார். அவருக்காக வாங்கிய மோதிரத்தையும் எடுத்து காண்பித்துள்ளளார் ஸ்டீவ்.

இதை கேட்ட அவரது காதலி மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.இதையெல்லாம் அவருடைய காதலி உள்ளே இருந்து வீடியோ எடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில் காதலியின் சம்மதத்தை சொல்வதற்கு முன்பு அவர் நீரில் மூச்சு திணறி இறந்துவிட்டார். ஹோட்டலில் இருந்தவர்கள் எவ்வளவு போராடியும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்