எங்களுக்கு கோயில் கட்ட தேவையில்லை – வாணி போஜன்.!

Default Image

தெய்வங்களுக்குத்தான் கோயில் கட்ட வேண்டும் என்று நடிகை வாணி போஜன் கூறியுள்ளார். 

நடிகை வாணி போஜன் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சீயான் 60 படத்திலும், பரத்துக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை வாணி போஜனிடன் நடிகைகளுக்கு கோயில்கட்டுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கையில், அவர் கூறியது “எனக்கு இந்த விஷியத்தில் உடன்பாடு இல்லை. நாங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கிறோம். எங்களுக்கு கோயில் கட்ட தேவையில்லை. தெய்வங்களுக்குத்தான் கோயில் கட்ட வேண்டும். ” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்