உன்னால் முடியும் தோழா!

Published by
லீனா

தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. இது ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே கூட வருவதில்லை. நமக்கு நாமே வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு.

தன்னம்பிக்கையில்லா வாழ்வு

தன்னம்பிக்கை இல்லாத வாழ்வு, கூரையில்லாத வீட்டிற்கு சமம். தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதனால் வாழ்வில் இலட்சியத்தை அடைய முடியாது. நம்மிடம் தன்னம்பிக்கை வளர வேண்டும் என்றால், முதலில் நம்மை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, நம்முடைய பலம், பலவீனம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நாம் எந்த காரியத்தை செய்தாலும், முதலில் இதை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், நம்மால் நினைத்ததை சாதிக்க முடியாது.

தாழ்வுமனப்பான்மை அகற்று

தன்னம்பிக்கை நம்மில் வளருவதற்கு தடையாக இருப்பது நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான். இந்த மனப்பான்மை நம்மை விட்டு நீங்கினாலே தன்னம்பிக்கை தானாக நம்மிடம் வந்து விடும்.இதை என்னால் செய்ய முடியுமா? இதையெல்லாம் செய்வதற்கு நான் தகுதியானவன் இல்லை என நமக்குள் எழும் எண்ணங்கள், நம்மில் தன்னம்பிக்கையை வளர விடாமல் தடுக்கும் நச்சு களைகள். இவற்றை பிடுங்கி எரிந்து விட்டாலே தன்னம்பிக்கை நம்மில் வளர்ந்து விடும்.

நீ போராடி ஜெயிக்க பிறந்தவன்

உலகம் ஒரு போராட்டக்களம். அதில் நாம் போராடி ஜெயிக்க வேண்டும் என்றால் தன்னம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்று. கடும் போட்டிகள் நிறைந்த இந்த உலகில், புதிது, புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். முதலில் நம்முடைய ஆசை கனவு, இலட்சியம் எது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் அதற்கான வேலையை விரும்பி செய்யும் போது, கவனம் சிதறாமல் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், வெற்றியடைய முடியும். நாம் முயற்சி எடுத்தால், நாம் வெற்றியடைவதற்கான பாதை தானாக உருவாகிவிடும்.
மரம் வளருவதற்கு நீர் எவ்வளவு அவசியமான ஒன்றோ, அதுபோல நமது வாழ்வில் நாம் நினைத்ததை சாதிக்க தன்னம்பிக்கையும் அவசியமான ஒன்று.

Published by
லீனா

Recent Posts

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

22 minutes ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

59 minutes ago

ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…

1 hour ago

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

2 hours ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

3 hours ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

5 hours ago