யாரடி நீ மோகினி தொடரின் வில்லி ஸ்வீதா அதாவது, சைத்ரா தனது காதலனுடன் நிச்சயம் செய்துகொண்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர்தான் யாரடி நீ மோகினி. இந்த தொடரில் கதாநாயகியை விட வில்லிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சீரியல்கள் என்றால் கதாநாயகி அப்பாவியாக இருந்தால் அவரை தான் பலருக்கு பிடிக்கும். இந்த சீரியலில் கதாநாயகிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு வில்லிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் அவரது அழகும் தனது நிஜ வாழ்க்கை முறையில் குழந்தைத்தனமான புத்தியும் தான் அதற்கு காரணம். ஆம் யாரடி நீ மோகினி தொடர் சைத்ரா ரெட்டி அவர்களை பற்றி தான் பார்க்கிறோம்.
இவர் ராகேஷ் குமார் என்பவரை காதலித்து வந்தது கடந்த சில நாட்களுக்கு முன்பதாகவே அனைவருக்கும் தெரியும்.அவரும் சினிமா துறையில் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்பொழுது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதற்கான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சைத்ரா. அவரது காதலரும் பதிவிட்டுள்ளார். இவரது நிச்சயதார்தத்துக்கு அவரது திரையுலக நண்பர்கள் ரேஷ்மா, ஷபானா, வெண்ணிலா ஆகியோரும் வந்துள்ளனர். சித்ராவுக்கு பல்வேறு ஜீ தமிழ் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…