தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இங்கிலீஷ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவர் காலாப்பானி, ரோஜா, தளபதி, ராவணன், துப்பாக்கி, தர்பார், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் 12 முறை தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மலையாளத்தில் ஜாக் ஆண்ட் ஜில் என்ற படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார்.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சௌபின் சாகிர் நடிக்கிறார். தற்போது இந்த படத்தை தமிழிலும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம் சென்டிமீட்டர் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் சௌபின் சாகிர் நடித்த வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…