விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் யாஷிகா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பரபலமானார்.
இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக கடைமயை செய் என்ற படத்தில் நடித்து வந்தார். இதற்க்கிடையில், கடந்த கடந்த ஜூலை 25-ஆம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும்போது கார் விபத்துக்குள்ளானது.
கடந்த ஜூலை 25-ஆம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றார். பார்ட்டிக்கு சென்று திரும்பியபோது, கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் இரண்டு ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடுப்பு எலும்பு, வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நடிகை யாஷிகா தனது ட்வீட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் யாஷிகாவின் அம்மா, மற்றும் அவரது செல்லப்பிராணி இடம்பெற்றுள்ளனர். அதில் ” என்னுடைய வலிமை” என குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நலமா,சீக்கிரம் நலம் பெற்று வாங்க,உங்க ரசிகர்கள் நாங்கள் உங்களை வெண்திரையில் காண காத்திருக்கின்றோம், பிரார்த்தனைகளுடன் என கூறிவருகிறார்கள்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…