பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார் என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த கருத்து இந்திய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஆனால் ட்ரம்பின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் வாஷிங்டன்னில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது காஷ்மீர் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,இந்தியா – பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன்.பிரதமர் மோடி விரும்பினால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று தெரிவித்தார்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் மிகவும் நல்லவர்கள் என்று தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…