சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு..!

Published by
Sharmi

வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களை தீர்க்க இந்த விநாயகர் வழிபாடு செய்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும்.

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைகிறது. சிலர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கின்றனர். சிலர் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கஷ்டங்களை சந்திக்கின்றனர். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வியை தழுவுவது, அடுக்கடுக்காக கஷ்டங்களை சந்திப்பது இது போன்று தொடர்ந்து நேரும் சங்கடங்களில் இருந்து விடுபட முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமானின் வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த வழிபாடு மூலமாக வேலையில் ஏற்படும் பிரச்சனை, வீட்டு சுப காரியங்களின் போது ஏற்படும் பிரச்சனை, திருமணத்தடை, குழந்தைப் பேறு பெறுவதில் தடை இது போன்ற அனைத்து கஷ்டங்களையும் தகர்த்தெறிய கூடிய இந்த வழிபாடு பற்றி பார்க்கலாம். முதலில் ஒரு நல்ல முழு தேங்காயை வாங்கி விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். கோவிலுக்கு சென்று அந்த தேங்காயை இரண்டாக உடைத்து, தேங்காயின் இரண்டு மூட்டுகளிலும் தேங்காய் எண்ணெயை ஊற்றி, மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.

அந்த தீபத்தை விநாயகரின் முன்பு வைத்துவிட்டு, மனதார 11 முறை தோப்புக்கரணம் போடுங்கள். முடிந்தால் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையில் 11 செய்து எடுத்து கொண்டு விநாயகர் முன்பு வைத்து நிவேதனம் செய்யுங்கள். அந்த கொழுக்கட்டையை அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யுங்கள். பின்னர் விநாயகரை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இறுதியாக விநாயகரிடம் கீழ்வரும் மந்திரத்தை கூறி பூஜையை நிறைவு செய்யுங்கள்.

ஓம் கணபதியே வருக

ரீங் கணபதியே வருக

ரீங்கார கணபதியே வருக

கங் கணபதியே வருக

எங்கள் குடும்பம் மேன்மையுற சங்கடங்கள் தீர்க்க

வசிவசி வய நமசிவாய நம

இதனை கூறி விநாயகரிடம் மனமுருகி உங்களுடைய கஷ்டங்களை கூறுங்கள். அந்த கஷ்டங்கள் கூடிய விரைவிலேயே தீரவேண்டும் என்ற வேண்டுதலை விநாயகரிடம் வையுங்கள். இறுதியாக நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த வேண்டுதலை மாதம்தோறும் வரக்கூடிய சங்கட சதுர்த்தி அன்று விநாயகரை இது போன்று வழிபட்டால் உங்கள் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நிரந்திர தீர்வை அந்த முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமான் கொடுப்பான்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago