உலகளவில் கொரோனா பாதிப்பு 12,74,346 ஆகவும், உயிரிழப்பு 69,480 ஆகவும் அதிகரிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கண்டு வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கின்றனர். மேலும் தங்கள் நாட்டு மக்களை எல்லாம் கொரோனாவிற்கு பலி கொடுத்து வருகின்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு உலகளவில் லட்சக்கணக்கில் உயர்ந்து, உலக சுகாதார நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் வகையில் பரவி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,74,346 ஆகவும், உயிரிழப்பு 69,485 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோன பாதிக்கப்பட்டவர்களில் 2,64,838 பேர் குணமடைந்துள்ளார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதையடுத்து கொரோனா பாதிப்பிற்கு அமெரிக்காவில் 3,36,830 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அங்கு 9,618 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து ஸ்பெயினில் 1,31,646 பேர் கொரோனாவால் பாதித்து உள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 12,641 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,948 ஆகவும், பலி எண்ணிக்கை 15,887 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுதான் உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ள நாடு என்பதாகும். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

32 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago