உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39,17,627 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூரமான வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39,17,627 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 2,70,720 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 13,44,164 பேர் குணமடைந்து உள்ளார்கள். கொரோனா வார்டில் தற்போது வரை 23,02,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 48,958 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டதில் அமெரிக்காதான் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு கொரோனாவால் 12,92,623 பேர் பாதிக்கப்பட்டு, 76,928 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்பெயினில் 2,56,855 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை அங்கு 26,070 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வந்த இத்தாலி நாட்டில் தற்போது வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. அங்கு, 2,15,858 பேர் பாதிக்கப்பட்டு, 29,958 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தாக்கத்தின் குறைவால் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…