இன்று நவீன மயமாக்குதல் என்ற பெயரில், உலகின் இயற்கை வளங்களை 90 சதவீதம் அழித்துவிட்டு, அதன் விளைவாய் தோன்றும் விளைவுகளான பல்வேறு பருவ கால மாறுபாடு காரணமாக பூமியில் மாழை பொய்த்துப்போய்விட்டது. இங்கு கிடைக்காத தண்ணீரை செவ்வாய் கிரகத்தில் தேடிக் கொண்டு இருக்கிறான் இன்றைய மனிதன்.நீர் சூழ் உலகாக மூன்று பங்கு கடல் இருந்தும், அதனை குடிநீராக்கும் சிந்தனையை விடுத்து, வேற்றுகிரக வாசியை தேடியே நம் அறிவியல் எல்லாம் வர்த்தகமயமாக்கப்பட்டு வருவதால், மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக்கின் தீமையை அறிந்த அனைவரும் அதன் பயன்பாட்டை குறைக்க முன்வராதது ஏன்?. அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் அரசு அதன் உற்பத்திக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்ற உயர் சிந்தனை வினாக்கள் எழுகின்றது. இயற்கையில் கிணறுகள், குளங்களை மூடிவிட்டு, செயற்கை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி நீச்சல் அடிக்கிறோம். என் அப்பா நீரை ஆற்றில் பார்த்தார், நான் நீரை குழாயில் பார்க்கிறேன். என் மகன் நீரை எதில் பார்ப்பானோ என்ர கேள்வி அனைவரையும் சிந்திக்க வைக்கும் கேள்வியாகும். உலகளவில் அன்றாட தேவைக்கான சுத்தமான குடிநீர் இல்லாமல், 400 கோடி மக்கள் இன்றளவும் திண்டாடுவதாகவும், அதிலும் குறிப்பாக பல ந்திகள் ஓடும் இந்தியாவில் சுமார் 100 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், இதில், 60 கோடி மக்கள் அதிக வறட்சியான நிலங்களில் வசிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடற்ச்சியாக மரங்களை வெட்டுவதால் மழையின்றி அவதிப்படுகிறோம். கடந்த ஆண்டு போதிய பருவ மழை பெய்யவில்லை. உலகம் முழுவதும் இயற்கையை அழித்ததன் விளைவாக, பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகம் வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இந்த உலகம் ஒன்று தான். உலகில் வாழ நீர் வேண்டும். நீரின்றி அமையாது உலகம். எனவே தண்ணீரை தேவை இல்லாமல் வீணாக்கவேண்டாம். சிறு துளி பெருவெள்ளம்!
எனவெ மழை நீரை சேமிப்போம். நீரை சிக்கணமாக பயன்படுத்துவோம்.
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு…
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு…
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…