வரலாற்றில் இன்று(12.03.2020)… உடலின் மாஸ்டர் கெமிஸ்டின் உலக தினம் இன்று…

Published by
Kaliraj

சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.அந்த வகையில் இன்று(12.03.2020) இந்த தினம் கடைபிடிக்கப்ப்டுகிறது.  சிறுநீரகம் உடலின் முக்கியமான உடற்பாகங்களில் ஒன்று. இது ரட்தத்தை சுத்திகரித்து  சிறுநீரை பிரித்தெடுத்து வெளியே அனுப்புகிறது. உடல் உஷ்ணம் காரணமாகவும், தண்ணீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றனர். இது சிறுநீர்பையில் சேர்ந்து சிறுநீரை அடைக்கிறது. சிறுநீரக நோயானது பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடலில் சுரக்கக் கூடிய சோடியம், பொட்டாசியம், ஹைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற மினரல் மற்றும் வேதிப்பொருள்களை சரியான அளவில் சமநிலை செய்வதில் சிறுநீரகம்  பெரும் பங்கு வகிக்கிறது. உதாரணமாக சோடியத்தின் அளவு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மனிதனின் மனநிலை பாதிப்படையும். அதேபோல் பொட்டசியம் அதிகமானால் இதயம் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் மாறுபடும். காசியம், பாஸ்பரஸ் அதிகமானால் எலும்பு மற்றும் பற்களை பலவீனமாக்கும். இந்த அளவை சமநிலை செய்வது சிறுநீரகங்கள் தான். நாட்பட்ட சிறுநீரக நோயினால் உலகளாவிய அளவில் சுமார் 195 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் இறப்பதற்கு காரணமான நோய்களில் நாள்பட்ட சிறுநீரக நோய் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆண்களில் 12 சதவீதம் பேரும், பெண்களில் 14 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு  உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்நோய் பெண்களை எளிதாக தாக்குகிறது. நாம் உயிர் வாழ, நம் உடல் ஆரோக்கியமாக இருக்க பல  நன்மைகளைச் செய்யக்கூடிய  சிறுநீரகத்திற்கு நாம் செய்ய வேண்டிய பதில் கடமை ஒன்றே ஒன்றுதான். நன்கு சுத்தமான நீர் அருந்துவது. இதை நீங்கள் சரியாகச் செய்தாலே சிறுநீரகம் ஆரோக்கியமடையும். அதன் வேலையையும் சிறப்பாகச் செய்யும்.

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

4 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

5 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

6 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

7 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

8 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

9 hours ago