இந்தியாவில் 6 மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.3,700 கோடி கடன் அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது.
உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய மாநிலங்களில் பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்தவும் அனைவருக்கும் கல்வி என்ற அரசின் லட்சியத்துக்கு ஆதரவு அளிக்க கடந்த 1994-ம் ஆண்டு முதல் உலக வங்கியுடன், இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 24-ஆம் தேதி உலக வங்கியின் நிா்வாக இயக்குநா்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் , இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், கேரளா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய 6 மாநிலங்கள் பயன்பெறும்.
மேலும், 15 லட்சம் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட 25 கோடி மாணவர்கள் மற்றும் 1 கோடி ஆசிரியா்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…