இந்தியாவில் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள நான்கு திட்டங்களுக்கு உலக வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டங்கள் பலவிதமான வளர்ச்சி முயற்சிகளை ஆதரிக்கின்றன. இந்தியாவின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துதல், சத்தீஸ்கரில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் விவசாயத்தை ஊக்குவித்தல், நாகாலாந்தில் தரமான கல்வியை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போதுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதலுக்கு உதவுகிறது.
இந்த நான்கு திட்டங்கள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சிறந்த வருமான வாய்ப்புகள், கல்வி, நீர் வழங்கல் ஆகியவற்றிக்கு உதவுகிறது என்று உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமது கூறினார். அங்கீகரிக்கப்பட்ட நான்கு திட்டங்களில் 100 மில்லியன் டாலர் சத்தீஸ்கர் உள்ளடக்கிய கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சி திட்டம் மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு பல்வகைப்பட்ட மற்றும் சத்தான உணவை வழங்க உதவுகிறது.
இரண்டாவது திட்டம் நாகாலாந்தில் 68 மில்லியன் டாலர் வகுப்பறை, கற்பித்தல் மற்றும் வளங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகும். இந்தியாவின் அணை மேம்பாடு மற்றும் புனர்வாழ்வு திட்டத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டங்களுக்கும் உலக வங்கி நிதியளிக்கிறது.
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…