அமெரிக்காவில் ஆணாக மாறிய பின் குழந்தை பெற்ற அதிசய நபர் புகைப்படங்கள் வெளியானது !!!!!

Default Image
  • சிம்ப்சன் தன்னுடைய 21-வது வயதில் ஆணாக மாறினார்.பின்பு ஸ்டீபன்கேத் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
  • கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை சிம்ப்சன் உணர்ந்தார்.

அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

பிறப்பால் ஆணாக பிறந்து பின்பு மனதளவில் தங்களை பெண்ணாக உணர்ந்து அதற்கான அறுவை சிகிக்சை செய்து பெண்ணாக மாறுபவர்களை திருநங்கை என்று அழைக்கின்றனர்.

அதேபோல் பிறப்பால் பெண்ணாக  பிறந்து பின்பு மனதளவில் தங்களை ஆணாக உணர்ந்து அதற்கான அறுவை சிகிக்சை செய்து ஆண்களாக  மாறுபவர்களை திருநம்பி  என்று அழைக்கின்றனர்.

பொதுவாக திருநங்கைகளுக்கு குழந்தை பாக்கியம் என்பது இல்லை.இந்நிலையில் அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தை சார்ந்த சிம்ப்சன் பிறப்பால் பெண்ணாக  பிறந்து பின்பு மனதளவில் தங்களை ஆணாக உணர்ந்தார்.இதனால் தன்னுடைய 21-வது வயதில் ஆணாக மாறினார்.பின்பு ஸ்டீபன்கேத் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை சிம்ப்சன் உணர்ந்தார்.

ஆனால் மாதவிடாய் நின்றிருந்தால் சிம்ப்சன் கர்ப்பம் அடைய வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறி உள்ள நிலையில் சிம்ப்சன் கர்ப்பம் அடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிம்ப்சன் முகத்தில் தாடி , மீசை உடனும் வயிற்றில் குழந்தையும் வைத்து கொண்டு தெருவில் போகும் போது பலர் கேலி செய்து உள்ளனர்.

அதற்க்கு  எல்லாம் சிம்ப்சன் கவலைப்படவில்லையாம்.இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சிசேரியன் மூலம் சிம்ப்சனுக்கு ஆண்குழந்தை பிறந்தது.

தற்போது சிம்ப்சன் தன் மகனுடன் சந்தோசமாக இருப்பதாகவும், மீண்டும் குழந்தை பெற்று கொள்ள ஆசை இல்லை எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்