பெண்களின் கருப்பைக் கோளாறுகள் நீங்க..!

Default Image

 

இப்போதெல்லாம் குழந்தைவரம் வேண்டி பெண்கள் கடுந்தவம் செய்யவேண்டி இருக்கிறது .
இவை எல்லாம் முறையல்லாத உணவு பழக்கத்தினால் அன்றி வேறல்ல. பெண்களுக்கு உண்டாகும் பெரும்பான்மை கருப்பை சார்ந்த குற்றங்கள் எளிதில் தீர்க்க கூடியன . ஆனால் ஆண்களின் சிக்கல் சற்று கடுமையாக இருக்கிறது . ஒருவீட்டில் குழந்தைப்பேறு இல்லை என்றால் அதற்க்கு மூகாமையான காரணம் பெண்ஆகிவிடுகிறாள்.  குழந்தை பேரு இல்லை என்றால் இன்னொரு திருமணம் ஆணுக்கு ஆனால் ஆண் குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்ற நிலையில் பெண்கள் வேறு திருமணத்தை நாடுவதில்லை.

கருப்பை சார்ந்த குறைபாடுகள் .

வெப்ப நாடுகளில் பெண்கள் பாலியல் சார்ந்த பல்வேறு நோய்களுடனே காலத்தை கடத்த வேண்டியுள்ளது . முறையான உணவுத்திட்டம் பற்றிய கோரிக்கைகளை முறையில்லாத மருத்துவ முறை களிடம் வைக்கபடுகிறது .

பாவம் மக்கள் ஆங்கிலேய அடிமை ஆட்சிமுறை நம்மை மெக்கலன் சொன்னமாதிரியே அவனுக்கு அடிமையாகவே ஆக்கி விட்டது . இந்த பெண்மைக்குறைபாடுகளை முறையாக ஆய்ந்த நாம் அறிவு சார்ந்த முன்னவர்களான சித்தர்கள் பருண்மையாக ஆய்வு செய்து மக்களுக்கு கொடையாக வழங்கி இருக்கிறார்கள் .

1 .பெண்களுக்கு கருக்குழி விளக்கமற்று பாசு படிந்து இருந்தாலும்.
2 .கருக்குழி வளி மிகுந்து இருந்தாலும் .
3 .கருக்குழாயில் சதை வளர்ந்து இருந்தாலும்.
4 .கருக்குழையில் பூச்சிகள் இருந்தாலும்.
5 .கருக்குழாயில் இரத்தம் கட்டி இருந்தாலும்.
6 .கருக்குழாயில் தசை திரண்டு மதத்திருந்தலும்

கருக்குழாய் உள்ளே விந்தணுக்கள் செல்லாது . என பருண்மையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள் . இவைகளுக்கு முறையே தனியே ஒவ் ஒன்றக்கும். தனியான குறி குணங்களும் தனியான மருத்துவமும் கூறப்பட்டு உள்ளது .முறையான மருத்துவர் எந்த நோய் பற்றி இருக்கிறது என கண்டறிந்து நோயில் இருந்து விடுவிப்பார் .

மண்சோறு

இந்த சிக்கலுக்கு மண் சோறு எங்ஙனம் தீர்வாக இருக்க முடியும் ? இதுவும் அறிவியல் பார்வை கொண்டது தான் அதாவது முறையாக எரியோம்பல் (ஆசனப்பயிற்சி ) செய்ய கூறினால் எனக்கு வேலை இருக்கிறது செய்ய இயலாது என வாய் கூசாமல் கூறும் தாய் குளங்கள் இப்படி கண்மூடித்தனமான செய்கை களை கூறினால் ஏற்பார்கள் என்பதால் இப்படி செய்யப்பட்டதாகும்.

இந்த மண்சோறு அடிப்படையில்
மகா முத்ரா என்ற ஆசனம் ஆகும் இந்த ஆசனம் செய்வதால் பெண்களின் கருப்பை குற்றங்கள் பெரும்பான்மை தீரும் . எனவே இன்றைய இளம் பெண்கள் இந்த மகாமுத்தர ஆசனத்தை நாளும் பழகி வந்தால் கருப்பை குறைபாடுகள் தீரும் . அவற்றோடு ஜானு காசியாசனம் என்ற ஆசனங்களை முறைப்படி செய்து வரலாம் . இவற்றோடு கருப்பையை வெப்பம் அடைய செய்யும் காரம் ,புளி, தள்ளி எள் நெய் குளியல் செய்து கருப்பை பலமடையும் குமரி சேர்ந்த மருந்து களை எடுத்துவர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் குழந்தைபேறு எளிதில் கிட்டும் அதேவேளை காபின், கோக் போன்றவை சேர்ந்த மயக்கப் பொருட்களை நீக்க வேண்டியது தேவையாகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்