அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லாண்டாவில் கொரோனா தடுப்பு ஊசி பெறுவதற்காக இரண்டு பெண்கள் வயதானவர்கள் போல வேடமிட்டு வந்த பெண்கள் அதிகாரிகளிடம் சிக்கினர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கையிலும் உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லாண்டாவில் கொரோனா தடுப்பு ஊசி பெறுவதற்காக இரண்டு பெண்கள் வயதானவர்கள் போல வேடமிட்டு வந்துள்ளனர். இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்ட நிலையில், அந்தப் பெண்கள் இருவருக்கும் ஒருவருக்கு 34 மற்றும் இன்னொருவருக்கு 44 வயது என கண்டறிந்துள்ளனர்.
இந்தப் பெண்கள் இருவரும் தங்களது இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்காக வந்தபோதுதான் அதிகாரிகளிடம் சிக்கி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் தங்களது முதல் தடுப்பூசி எப்படி பெற்றனர் என்பது புரியாத புதிராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் இரண்டு பெண்களின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் சுகாதார அட்டையில் இருந்த வயது வித்தியாசத்தால் ஏற்பட்ட சந்தேகம் தான் அவர்கள் சிக்க காரணமாக அமைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…