பாகிஸ்தானில் முதல் முறையாக ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பெண் நியமனம்.!

Published by
Ragi

பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நிகர் ஜோஹர் என்ற பெண் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களையே சார்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள். அங்கு பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டாலும் அரசு வேலைகளிலும், ராணுவம் உள்ளிட்ட துறைகளிலும் அனுமதி இல்லை . தற்போது சில இடங்களில் பெண்களையும் அனைத்து துறைகளிலும் நியமனம் செய்து காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக நிகர் ஜோஹர் என்ற பெண்ணை நியமனம் செய்துள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இயக்குநரான ஜெனரல் மேஜ் ஜென் பாபர் இப்திகார் ட்வீட் செய்துள்ளார். 1985-ல் ராவல்பிண்டியிலுள்ள ராணுவ மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற நிகர் ஜோஹர் இராணுவ மருத்துவ படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

அதன் பின்னர் 2017-ல்  ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதிவு உயர் செய்யப்பட்ட மூன்றாவது பெண் என்ற புகழை பெற்றார். தற்போது ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பதிவு உயர்வு பெற்றுள்ளார்.  நிகர் ஜோஹர் அவர்களின் தந்தை மற்றும் கணவர் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

22 minutes ago

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…

27 minutes ago

500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!

சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…

42 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

59 minutes ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

3 hours ago