நாடாளுமன்றத்தில் வைத்து சக ஊழியர் ஒருவரால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவர்கள் இந்த தவறுக்காக தான் மன்னிப்பு கோருவதாக கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மந்திரி ரொனால்ட்ஸ் அலுவலகத்தில் வைத்து ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரிட்டானி ஹென்னக்ஸ் எனும் பெண் ஒருவர் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் முறையாக அப்போது புகார் அளிக்க விரும்பாத அவர், தற்போது முறையாக புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் மூலமாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இவ்வாறு நடந்ததாக ஏற்கனவே காவல்துறையில் தகவல் தெரிவித்தது போலவே, பாதுகாப்பு மந்திரியின் அலுவலகத்தில் உள்ள மூத்த ஊழியர்களிடமும் இதுகுறித்து தெரிவித்திருந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்தப் பெண் கூறியது உண்மைதான் என பாதுகாப்பு மந்திரி ரெனால்ட்ஸ் அவர்களும் நேற்று உறுதிப்படுத்தி இருந்தா நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவர்கள் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், அரசாங்கத்தின் பணியிட கலாச்சாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும், இந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் இவ்வாறு அந்த பெண்ணுக்கு நடந்து இருக்க கூடாது. இருப்பினும் மீறி நடந்து இருப்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்த அவர், இந்த இடத்தில் பணி புரிய கூடிய எந்த ஒரு இளம்பெண்ணும் பாதுகாப்பாக இருப்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…