2008- ஆம் ஆண்டில் 13 வயதாக இருந்ததில் இருந்து இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிசில் உள்ள போர்க்-லா- ரெய்ன் என்ற தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த பியர் என்ற தீயணைப்பு வீரர் மருத்துவ கோப்புகளில் இருந்து, ஒரு பெண்ணின் நம்பரை எடுத்து, அந்தப் பெண்ணுக்கு ஆசை வார்த்தைகளை கூறி குறுந்தகவல்களை அனுப்பியதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது அப்பெண்ணிடம் வெப்கேமுக்கு முன்னால், ஆடை இன்றி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்பெண்ணும் அந்த வீரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதை செய்துள்ளார். பின்பு எனது எண்ணை அவரது மற்ற வீரர்களுக்கும் அனுப்பினார். மற்ற தீயணைப்பு வீரர்களும் அவரை அதுபோலவே செய்யச் சொல்லியதாக குற்றம்சாட்டியுள்ளார். 2008- ஆம் ஆண்டில் 13 வயதாக இருந்ததில் இருந்து இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் கூறியுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் 3 பேர் மீது மட்டுமே பாலியல் மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளது. ஆனால் யார் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரையில், பாலியல் மீறலுக்கான அதிகபட்ச தண்டனை 7 வருடமும், பாலியல் வன்கொடுமைக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். இந்தப் பெண் தனது குற்றச்சாட்டுகளை உண்மை என்று நிரூபிக்க 10 ஆண்டுகள் ஆன நிலையில், அப்பெண்ணுக்கு நீதிகோரி தற்போது பல பெண்ணிய குழுக்கள் பாரிஸின் தெருக்களில் போராடத் தொடங்கியுள்ளனர்.
இதில் இந்த வழக்கானது பிரான்சின் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், மூன்றுபேர் பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே பெண்ணின் சம்மதத்துடன் நடந்ததால் இது பாலியல் வன்கொடுமை அல்ல என்று கூறியுள்ளனர். இது பிரான்சில் உள்ள பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…