45 நிமிடம் மருத்துவ ரீதியாக உயிரிழந்தவர், தனது பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் முன் உயிர் பெற்றார்..!

Published by
Sharmi

45 நிமிடம் மருத்துவ ரீதியாக உயிரிழந்தவர், தனது பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் முன் உயிர் பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

45 நிமிடங்களுக்கு மருத்துவ ரீதியாக இறந்த ஒரு பெண் தன் மகளுக்கு குழந்தை பிறக்கும் முன்பே மீண்டும் உயிர்பெற்றுள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த கேத்தி பாட்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அவருக்கு வாழ்க்கையில்  மீண்டும் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேத்தி கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அவள் மகள் ஸ்டேசி ஃபைபர் பிரசவத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் கேத்தி தனது மகளுடன் இருக்க மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால் அங்கு வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பாட்டியாக காத்திருந்த கேத்திக்கு உடனடியாக அவசர சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிபிஆர் முயற்சித்து ஆக்ஸிஜனை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து 45 நிமிடங்களுக்கு மூளை, இதய துடிப்பு, இரத்த அழுத்தம் அல்லது ஆக்ஸிஜன் போன்ற எதுவும் செயலில் இல்லை. இந்த செயல்கள் அனைத்தும் கேத்தி மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதைக் காட்டியுள்ளது. அதே நேரத்தில், ஸ்டேசி அவசர சி-பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் பின்பு முதல் அதிசயம் நடந்துள்ளது. மருத்துவர்கள் கேத்தியை மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ளனர். இந்த சம்பவம் ஜூலை 22 அன்று நடந்தது.

இந்த நிகழ்விற்கு பிறகு கேத்தி தெரிவித்துள்ளதாவது, எனக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என்னால் முடிந்த மிகச்சிறந்த நபராக இருப்பேன். திரும்பி வருவது வாழ்க்கையின் இரண்டாவது வாய்ப்பு, அது நினைத்து பார்த்தாலே திகிலூட்டுகிறது என்று கூறியுள்ளார்.

கேத்தி உயிர் பெற்ற சிறிது நேரம் கழித்து, ஸ்டேசி குழந்தை அலோராவைப் பெற்றெடுத்துள்ளார். இது குறித்து ஸ்டேசி, என் அம்மா இங்கே இருக்க வேண்டுமென்பது விதிதான். என் அம்மா அலோராவால் இன்று இங்கே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கேத்திக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் டோவ் ஃபிராங்கெல், அன்று அங்கு நிகழ்ந்த சம்பவங்களினால் ஆச்சரியப்பட்டுள்ளார். இந்த நிகழ்வை குறித்து அவர், வாழ்க்கையின் அர்த்தத்தை இந்த சம்பவம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. ஒருபோதும் முயற்சியை கைவிடாததன் அர்த்தத்தை இது எங்களுக்குக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

Recent Posts

காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…

12 hours ago

கொல்கத்தா ஹைதராபாத் இல்லை…இந்த 4 அணிகள் தான் பிளேஆஃப் போகும்…அடிச்சு சொல்லும் இர்ஃபான் பதான்!

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த  4 அணிகள் பிளேஆஃப்…

13 hours ago

தீர்ந்தது சிக்கல்..வீர தீர சூரன் படம் வெளியிட அனுமதி கொடுத்த டெல்லி நீதிமன்றம்!

சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…

14 hours ago

பதவி விலகனும் இல்லைனா இபிஎஸ் அவமரியாதையை சந்திப்பார்! ஓபிஎஸ் பதிலடி!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…

15 hours ago

ஏன் முடியாது? கண்டிப்பாக 300 அடிப்போம்…ஹைதராபாத் பயிற்சியாளர் அதிரடி பேச்சு!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…

16 hours ago

“வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா முஸ்லீம்களை வஞ்சிக்கிறது!” பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…

17 hours ago