முதலமைச்சராக இல்லாமல்; உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன் – எடப்பாடி பழனிச்சாமி.!

Default Image

நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை  நாட்டு மக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

இதையெடுத்து நள்ளிரவு 12 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் ஏற்கனவே 144 தடை ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களிடம் உரையாற்றினார்.

அதில்  தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.  21 நாள்  ஊரடங்கு உத்தரவு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம்.அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது சமூக விலகலை கடைபிடியுங்கள். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு.. என கூறினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்