விவசாயிகள் எதிர்கொள்ளும் வெட்டுகிளிகளின் அட்டாகாசம் குறித்து சிம்புவின் காளை பட நடிகையான மீரா சோப்ரா ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2005ல் எஸ். ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா என்ற மீரா சோப்ரா. இந்த படத்திலுள்ள மயிலிறகே மயிலிறகே பாடல் அனைவர் மனதையும் ஈர்க்கும். அதனையடுத்து மருதமலை, காளை, இசை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையானார்.
தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போராடி வரும் இந்த சூழ்நிலையில் புதிதாக வெட்டுகிளிகள் படையெடுத்து விவசாய நிலங்களை சூறையாடி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது நிலத்தை பாதுகாக்க இயலாமல் பெரிதும் வருத்தத்தில் உள்ளனர். தற்போது இந்த வெட்டுகிளிகளின் தாக்கம் ஊட்டி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இந்த வெட்டுகிளிகளை பிடித்து உணவுக்காக விற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதனை கண்ட மீரா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் உணவுக்காக வெட்டுகிளிகளை விற்பனை செய்யும் வீடியோவை பார்த்தேன் என்றும், இந்த வீடியோ உண்மையானதா? என்றும், மக்கள் உண்மையிலேயே வெட்டுகிளிகளை சாப்பிடுகிறார்களா? என்றும் கேட்டுள்ளார். தற்போது எதிர்கொண்டிருக்கும் கொரோனாவிடமிருந்து இன்னுமா பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…