நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள கோவிலை பார்வையிட்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது .
சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை கோவிலில் வைத்து எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் இந்த காதல் ஜோடி தங்களது திருமணத்தை நடத்துவதற்காக பல கோயில்களில் ஏறி இறங்குவதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு கோவிலுக்கு வருவதாகவும், அவற்றை பார்வையிட்ட பின்னர் அவரது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது. நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரண்டு காதல் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…