தென்னிந்திய நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்களை இரண்டு மாதங்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
தற்போது இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .அது மட்டுமின்றி பாலிவுட்டில் மெர்ரி கிறிஸ்துமஸ்,காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.அவ்வாறு இவர் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் மட்டுமே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் தமிழ் புத்தாண்டுக்கு துக்ளக் தர்பார், ஏப்ரல் மாத இறுதியில் பேராண்மை படத்தை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லாபம், மே மாதத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் நான்கு வருடமாக கிடப்பில் கிடக்கும் மாமனிதன் போன்ற படங்களும் இரண்டு மாதங்களில் சில நாட்கள் இடைவெளியில் ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…