கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் பரவி வரக்கூடிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது, இது வனப்பகுதியில் 32% எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தீயின் காரணமாக இதுவரை 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், ஒன்பது கட்டிடங்கள் சேதாரமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வனத்தீ அமெரிக்கா முழுவதும் உள்ள 83 க்கும் மேற்பட்ட வனப்பகுதியில் பரவி வருவதாகவும், இதனால் 10,435 கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை ஒட்டு மொத்தமாக 400 கட்டடங்களும் 348 வாகனங்களும் இந்த தீயால் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீக்கு காரணமானவர்களை தேடி வருவதாகவும் அம்மாகாண வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…